தருமபுரி மாவட்டத்தில் கைதாகி ஜாமீன் கோரி விண்ணப்பித்த பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 80 பேரின் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரி மாவட்டத்தில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்தன. இதுதொடர்பாக, 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 237 பேர் ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ளனர். இந்த நிலையில், மேலும், 80 பேர் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதில், 7 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது வரும் 15ஆம் தேதியும், 73 பேரின் ஜாமீன் மனுக்கள் குறித்து வரும் 22ஆம் தேதியும் விசாரணை நடைபெறும் எனக் கூறி அந்த மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி அன்புராஜ் ஒத்திவைத்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

